கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் -அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைக்கப்பட்டுள்ளன. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் நவம்பர் 2-ஆம் தேதி துவங்கி வைக்கப்பட்டது. இங்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் 100 மாணவ மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படிப்பிற்கு வயது வரம்பும் எவ்வித கட்டணமும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலைக்கல்லூரி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இங்கும் சைவம் மற்றும் வைணவ சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
|