மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழக அரசின் மாநிலப் பாடல்
மனோன்மணியம் பெ. சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தின் நிகழ்ச்சிகளில் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசின் அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடவேண்டும். இசைவட்டுகள் கொண்டு இசைப்பதை நிறுத்தி, பயிற்சி உடையவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும், என்று தமிழக அரசு கூறியுள்ளது.
|