தொல்காப்பியத்தினை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் தொடங்கின.
தமிழ் இலக்கணத்தினை தெளிவுற எடுத்துரைக்கும் பழமை வாய்ந்த தமிழ் நூல் தொல்காப்பியம். எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணங்களை செம்மையுற விளக்குகிறது தொல்காப்பியம். இன்றும் தமிழருக்கு இன்றியமையாத இலக்கண வழிகாட்டி நூலாக விளங்குகிறது.தொல்காப்பியத்தைப் 10 இந்திய மொழிகளிலும், 15 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திட்டத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இறங்கியுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் இரா. சந்திரசேகரன் மேற்கத்திய அறிஞர்கள் பலரால் பாராட்டப்படும் நூலாகத் தொல்காப்பியம் உள்ளதாக தெரிவித்தார்.
மராத்தி,குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, சமஸ்கிருதம், பெங்காலி, உருது, மைதிலி,துளு ஆகிய இந்திய மொழிகளிலும் உலக மொழிகளில் மலாய்,சிங்களம்,பிரெஞ்சு, அரபு,சீனம், ஜெர்மனி, ஜப்பான், ஸ்வீடிஷ்,ஃபின்னிஷ், கொரியன்,ஹீப்ரூ, ரஷ்யன், ஆப்கானிஸ்தான்,ஆப்ரிகான்ஸ்,சைபீரியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது.இதற்கென மொழிபெயர்ப்பாளர்களை விண்ணப்பிக்க கூறியுள்ளது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.
|