|
||||||||
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் |
||||||||
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் 1. வாழ்வென்பது உயிர் உள்ளவரை மட்டுமே. 2. தேவைக்குச் செலவிடு. 3. அனுபவிக்கத் தகுந்தன அனுவி. 4. இயன்றவரைப் பிறருக்கு உதவி செய். 5. ஜீவகாருண்யத்தை கடைப்பிடி 6. இனி, அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை. ஆகவே அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரியத் தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந’்து விடும். 10. உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு 11. உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளைப் பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னைக் கவனிக்க இயலாமல் தவிக்கலாம். புரிந்து கொள். 16. அதைப்போலப் பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்குச் சண்டை போடலாம். 17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள். 18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர், கடமை மற்றும் அன்பை அறியார். 19. ‘அவரவர் வாழ்வு அவரவர் விதிப்படி’ என அறிந்து கொள். 20. இருக்கும் போதே குழந்தைகளுக்குக் கொடு. 21. ஆனால் நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே. 22. ‘எல்லாமே நான் இறந்த பிறகு தான்’ என உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர்பார்த்துக் காத்திருப்பர். 23. எனவே, கொடுக்க நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்துவிடு. மேலும் தர வேண்டியதை பிறகு கொடு. 24. மாற்ற முடியாததை மாற்ற முயலாதே. 25. மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே. 26. அமைதியாக மகிழ்ச்சியோடு இரு. 27. பிறரிடம் உள்ள நற்குணங்களைக் கண்டு பாராட்டு. 28. நண்பர்களிடம் அளவளாவு. 29. நல்ல உணவு உண்டு, நடைப்பயிற்சி செய்து, உடல்நலம் பேணி, இறைபக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்த உறவாடி. மன நிறைவோடு வாழ். 30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் சுலபமாக ஓடிவிடும். 31. வாழ்வைக் கண்டு களி. 32. ரசனையோடு வாழ். 33. வாழ்க்கை வாழ்வதற்கே. 34. நான்கு நபர்களைப் புறக்கணி 35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே. 36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே அனாதை 37. நான்கு நபர்களுக்கு உனது கொடையைத் தடுக்காதே 38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி 39. நான்கு விசயங்களை வெறுக்காதே 40. நான்கு விசயங்களைக் குறை 41. நான்கு விசயங்களைத் தூக்கிப்போடு 42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு 43. நான்கு விசயங்களைச் செய் |
||||||||
by Lakshmi G on 04 Nov 2020 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|