LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.

பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்குச் சிறப்புப் பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

 

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த, கடந்த பிப். 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தமாநாடு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அற நிலையத் துறை அலுவலர்கள், ஆன்மிகப் பெரியோர்களை இணைத்து குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து ஆணை பிறப்பிக்குமாறு, அறநிலையத் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.

 

அதன்படி, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்தது. குழுவின் தலைவராக அறநிலையத் துறை அமைச்சர், துணைத் தலைவராகத் துறைச் செயலர், உறுப்பினர்களாக அறநிலையத் துறை சிறப்புப் பணி அலுவலர், ஆணையர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திருவண்ணாமலை ஆதீனம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் திருக்கயிலாயப் பரம்பரை திருப் பெருந்திரு சாந்தலிங்க மரு தாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத் திரு குமரகுருபர சுவாமிகள், தவத்திரு மயிலம் பொம்மர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், ஆன்மிகப் பேச்சாளர் கள் சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, பேச்சாளர் ந.ராம சுப்பிரமணியன், கோவை தரணிபதி ராஜ்குமார் மற்றும் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், பழநி கோயில் அறங் காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.