மே 7, திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெலின் பிறந்தநாள்
திராவிட மொழிகளின் தனித்துவத்தை வெளிக்கொணர்ந்த மொழியியலாளர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் மே 7 ஆகும். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற இவருடைய நூல் உலகத்தரமும் புகழும் வாய்ந்தது. கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்பாளராக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தவர். தமிழ் ஆய்வாளராக மாறி தமிழ்மொழி குறித்ததான ஆழமான உண்மைகளை நிலை நிறுத்தியுள்ளார். திருநெல்வேலி பகுதியில் பணியாற்றிய இவர் "திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் மற்றும் பொது வரலாறு" என்ற நூலினை எழுதினார்.
தமிழ் மொழியே உலகில் தோன்றிய முதன்மொழி என்றவர். கன்னடம்,மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகள் தமிழ் மொழி மற்றும் பிற மொழிகளின் கலப்பினால் உருவானவை என்று நிறுவியவர்.
"குமரி முனைக்கு தென்பால் உள்ள பெரிய நாட்டில் முதன் முதலாக தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக்கண்டத்தை கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும்,நில வழியாகவும், பெலுசிஸ்தான், மெசபடோமியா முதலிய வட மேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர் " என்பது அறிஞர் கால்டுவெல் அவர்கள் தனது புத்தகத்தில் கூறியுள்ள கருத்து.
தமிழர் இல்லையெனினும் தமிழ் மொழியே உலகின் முதல் மொழி, தமிழரே முதல் மூத்த குடியினர் என்பதை ஆதாரங்களோடு விளக்கிச் சென்றுள்ள அறிஞர் கால்டுவெலின் பிறந்தநாள் ஒவ்வொரு தமிழனும் நினைவுகூர்ந்து போற்றத்தக்கதாகும்.
|