2012ஆம் ஆண்டு அரக்கோணத்தில் சிறுவன் சங்கீத்ராஜ் (வயது8) பள்ளிக்கு போகும் வழியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து உயிரிழந்தான். அவனது அம்மா கெளரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மின்வாரியம் மீது வழக்கு தொடர்ந்து ஐந்து இலட்சம் இழப்பீடு கோரினார். சிறுவன் இறந்தது கடவுளின் செயல் என்றும், தாம் அதற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் தமிழக மின் வாரியம் புகாரை மறுத்தது. ஆனால், இதை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதத்திலிருந்து 12 சதவிகித வட்டியுடன் 3 இலட்சமும் வழக்கு செலவுக்காக 20,000 ரூபாயும் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
|