LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு குவியும் பாராட்டுகள்!

 

மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு குவியும் பாராட்டுகள்! 
----
ராஜஸ்தானில் மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மாமியாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 
ராஜஸ்தான் மாநிலத்தின்  சுற்றுலா நகரம் ஜெய்சல்மார். இதைப் பார்க்க ஏராளமானவர்கள் தினந்தோறும் இந்த நகருக்கு வருவது உண்டு. இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் பிரசித்திப் பெற்றது. 
இந்த நகரில் வசிப்பவர் சோனிகா (வயது 32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) யுடன் வசித்து வந்தார். சோனிகா, கடும் இடுப்பு வலி மற்றும் கீழ் வயிற்று வலியினால் அவதிக்கு உள்ளானார்.
 அவரைப் பரிசோதித்து பார்த்ததில், சிறுநீரகங்கள் செயலிழந்து இருந்தது தெரியவந்தது. இதனால் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, வலி மிகுந்த டயாலிசிஸ் முறையை மேற்கொண்டு வந்தார். 
இந்நிலையில், உடனடியாக சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதனால், சோனிகாவின் ரத்த வகையைச் சேர்ந்த சிறுநீரகத்தை அவரது உறவினர்களிடம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோனிகாவின் பெற்றோர், சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர். 
நாளுக்கு நாள் சோனிகாவின் நிலைமை மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். 
உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருமகள், மாமியாரின் குணத்தை போன்றே அவர்களது ரத்த வகையும் ஒத்துப்போனது. 
இதையடுத்து, கனிதேவியின் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். 
இதுபற்றி மிகவும் மனம்நெகிழ்ந்து கூறிய சோனிகா, ‘‘என் மாமியாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புது வாழ்வை அளித்துள்ளார்’’ என்றார்.
மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு அங்கே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ராஜஸ்தானில் மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மாமியாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தின்  சுற்றுலா நகரம் ஜெய்சல்மார். இதைப் பார்க்க ஏராளமானவர்கள் தினந்தோறும் இந்த நகருக்கு வருவது உண்டு. இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் பிரசித்திப் பெற்றது. 

இந்த நகரில் வசிப்பவர் சோனிகா (வயது 32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) யுடன் வசித்து வந்தார். சோனிகா, கடும் இடுப்பு வலி மற்றும் கீழ் வயிற்று வலியினால் அவதிக்கு உள்ளானார்.

அவரைப் பரிசோதித்து பார்த்ததில், சிறுநீரகங்கள் செயலிழந்து இருந்தது தெரியவந்தது. இதனால் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, வலி மிகுந்த டயாலிசிஸ் முறையை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், உடனடியாக சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதனால், சோனிகாவின் ரத்த வகையைச் சேர்ந்த சிறுநீரகத்தை அவரது உறவினர்களிடம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோனிகாவின் பெற்றோர், சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர். 

நாளுக்கு நாள் சோனிகாவின் நிலைமை மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். 

உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருமகள், மாமியாரின் குணத்தை போன்றே அவர்களது ரத்த வகையும் ஒத்துப்போனது. 

இதையடுத்து, கனிதேவியின் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். 

இதுபற்றி மிகவும் மனம்நெகிழ்ந்து கூறிய சோனிகா, ‘‘என் மாமியாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புது வாழ்வை அளித்துள்ளார்’’ என்றார்.மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு அங்கே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

by Mani Bharathi   on 08 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.