|
|||||
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது |
|||||
மிகச் சிறந்த ஆசிரியர் இறையரசன் என்பதற்கு அவருடைய மாணவர்களே சான்று! மூத்த தமிழறிஞர் சுந்தரமூர்த்தி புகழாரம்!!
விழாவிற்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான முனைவர்.இ. சுந்தரமூர்த்தி மற்றும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முனைவர்.இ. சுந்தரமூர்த்தி பொதுவாக ஆசிரியர்களை நான்கு வகையாக பிரிக்கலாம். சராசரியான ஆசிரியர், நல்ல ஆசிரியர் ,சிறந்த ஆசிரியர் ,மிகச் சிறந்த ஆசிரியர். மிகச் சிறந்த ஆசிரியர் தம் மாணவர்களை "மோட்டிவேட்" செய்து தன்னைக் காட்டிலும் திறன் பெற்றவர்களாக உருவாக்குவார். அத்தகைய ஆசிரியரிடம் கல்வி பயின்று வெளியே வருபவர்கள் பல துறைகளிலும் சாதனை படைப்பார்கள். இறையரசன் மிகச்சிறந்த ஆசிரியர் என்பதற்கு அவருடைய மாணவர்களே சான்று. இவ்வாறு முனைவர் இறையரசனுக்கு புகழாரம் சூட்டி முனைவர்.இ. சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
பேராசிரியர் தமிழடியான்(இறை மாணவர்): இப்போதெல்லாம் 10 ,11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை எல்லாம் கலை மற்றும் விளையாட்டுகளுக்கு அனுப்பாமல் ஜெயிலில் அடைப்பதை போல முடக்கி வைத்து விடுகிறார்கள். என்னை பேசுவதற்கு அழைக்கும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் போதெல்லாம் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை படி படி என்று அடைத்து வைக்காதீர்கள். அவர்களுக்கு அதுதான் படிப்பு"என்பேன். மாணவர்களின் எதிர்காலத்துக்கு உண்மையிலேயே நன்மை தரும் வழிமுறைகளை செயந்தி ஆனைவாரி ஆனந்தன் (முன்னாள் மாணவர்): தஞ்சை கோ.கண்ணன்: நான் சிறுவனாக இருந்த காலம் முதல் அவருடன் பழக்கம் உண்டு. வங்கிப் பணி ஓய்வுக்குப் பிறகு அவர் நிறுவிய தமிழ் எழுச்சி பேரவைக்கு தலைவராக இருந்து அவர் அருகில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனாக, புத்தக ஆசிரியராக இன்று நான் திகழ்வதற்கு அவர்தான் காரணம். கடாரம் கொண்ட சோழப் பேரரசன் இராசேந்திரன் வழித்தடம் தேடி மலேசியா, கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு அவருடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம். க.சு.சீதரன்(இராசராசன் வரலாற்றுப் பண்பாட்டுக் குழு, உடையாளூர் ), வருமானவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் செந்தாமரைக்கண்ணன்,கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் வ.செயபால், புலவர்.க.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் எழுச்சிப் பேரவை புரவலரும் இராசராசன் புகழ்பாடும் பொன்னியின் செல்வன் நாவலை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்தவருமான சரவணராசாபொன்னுசாமி தொகுத்து வழங்கினார். அவர் வாழ்த்துரை வழங்குகையில், "முனைவர் இறையரசன் திருப்பனந்தாள் கல்லூரியில் முதல்வராக இருந்த முனைவர் சு.இராமனின் "திருமந்திரத்தில் முப்பொருள்" ஏற்புரை வழங்கிய முனைவர் இராமன் மகன் மஞ்சு நாதன் தந்தையின் ஆய்வு நூலாய் வருவதற்குக் காரணமாயிருந்த முனைவர் இறையரனுக்குத் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி பாண்டுரங்கன்,கவிஞர் ஆனைவாரி ஆனந்தன், இந்திராணி, காவல்துறை முன்னாள் அதிகாரி பாலசுப் பிரமணியன், மொழிபெயர்ப்பு பணிக்காக தமிழக அரசு விருது பெற்ற "ஆக்கம்" மதிவாணன், செல்வி நிலா, மருத்துவத் தொண்டில் இந்திய விருது பெற்ற மருத்துவர் ரேணுகா இராமகிருட்டிணன், நன்னன்குடி திருமதி வேண்மாள், மணிவாசகர் பதிப்பக குருமூர்த்தி, தினமணி முன்னாள் உதவி ஆசிரியர் மஞ்சுளா , இயற்கை ஆர்வலர் பத்திரிகையாளர் மரிய பெல்சின், பேராசிரியர் பாரதிதாசன்,ஓவியர் பவானி ராசதுரை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் அவர் தம் குடும்பத்தினர். பத்திரிகை, ஊடக நண்பர்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்று வாழ்த்தியும் வாழ்த்து பெற்றும் சென்றனர். முனைவர் தஞ்சை இறையரசனார் மகன் தொகுப்பு : |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 22 Mar 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|