குற்றப் பின்னணி உடைய எம்.பி,எம்.எல்.ஏ.,க்கள் பதவியில் இருக்கும் போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டால் அவர்களின் பதவிகளை உடனடியாக பறிக்க ஏதுவாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களின், குற்றப் பின்னணி குறித்தும், தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் நிலை குறித்தும், பிரதி மாதம், 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்படும் என, மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
|