LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 1939-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி இயக்குனர் மகேந்திரன் பிறந்தார். 

பத்திரிகையாளர் மட்டுமின்றி சிறந்த கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என பன்முக திறன் கொண்டவர். 

முள்ளும் மலரும், ஜானி, உதரிப்பூக்கள், கை கொடுக்கும் கை, மெட்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். 

அதற்கு முன்னரே சிவாஜி கணேசனின் தங்கப்பதக்கம், ஆடுபுலி ஆட்டம், ரிஷி மூலம் காளி போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.

26 படங்களுக்கு கதையும், 14 படங்களுக்கு திரைக்கதையும், 27 படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். 
நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுஹாசினி, அஸ்வினி, அஞ்சு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தவர் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு.

திரைப்படங்களில் வசனங்களின் அளவைக் குறைத்து காட்சிகளின்  மூலம் பேச வைத்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் நடித்த தெறி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார். 

இயக்குநர் மகேந்திரன் கடந்த 27-ம் தேதி மதியம் 12 மணியளவில் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில்,அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இயக்குநர் மகேந்திரனை காண நெருக்கமான நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் . 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயக்குநர் மகேந்திரன் தனது 79 வயதில் காலமானார். தமிழ்த்திரையுலகின் பெயரை உலகறியச் செய்த இயக்குனர் மகேந்திரன் மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

by Mani Bharathi   on 03 Apr 2019  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
08-Apr-2019 15:08:07 ஸ்ரீகாந்தன் said : Report Abuse
திரையுலகம் சரித்திரத்தில் பதிந்த மனிதருள் ஒரு மாணிக்கம். திரை கதையிலும் , வசனங்களிலும் கையாண்ட உத்திகளால் பரிணமித்த சிருஷ்டி கர்த்தா அன்னாரின் மறைவால் வாடும் உள்ளங்களோடும் உறவுகளோடும் கைகோர்க்கின்றேன் .அவர் தம் ஆத்மா சாந்தியடைவதாக !
 
08-Apr-2019 11:45:12 வெ.தி முரு வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.பன்முகத்தன்மை கொண்ட இயக்குனர் திரு மகேந்திரனை இழந்து வாடும் அண்ணாரது உறவினர்களுக்கும், திரை துறையினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதில் வலைத்தமிழுடன் இணைந்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.