LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை!

கஜா புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் வரலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வங்கக் கடலில் உருவான கஜா’ புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

 வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 நாட்களுக்கு முன் புயலாக மாறியது. இதற்கு `கஜா’ என்று பெயரிடப்பட்டது. கடலில் மெல்ல நகர்ந்து வந்த கஜா புயல் நாகை அருகே  கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நாகை துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இது புயலின் அதிகபட்ச ஆபத்தை குறிப்பதாகும். இரவு 11.30 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டபோதும் அது மெதுவாகவே கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. 

அதிகாலை 12.01 மணிக்கு பயங்கர சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. அதிகாலை 2.30 மணி வரை நாகை - வேதாரண்யம் இடையே புயல் கரையைக் கடக்க துவங்கியது.  

அப்போது, காற்றின் வேகம் 110 கிலோ மீட்டரில் வீசியது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் இரவு 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. 

புயல் கரையை கடந்தபோது கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தன.  இந்த பகுதிகளில் சுமார் 21 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்துள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது.

நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் காற்று பலமாக வீசியது. இதனால்,  மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், மரங்களும் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் இல்லாததால்தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து வெளியூர்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கஜாவின் தாக்குதல் அருகில் உள்ள தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களுக்கும் நீடித்தது. இந்த மாவட்டங்களிலும் விடிய விடிய பேய் காற்றுடன் மழை கொட்டியது. ஒருசில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தது.  

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, கோடியக்காடு, வெள்ளப்பள்ளம், கீழ்வேளூர், நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருவையாறு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், புதுகை மாவட்டம் அறந்தாங்கி, கறம்பக்குடி, அம்புவயல், பிலாவிடுதி ஆகிய பகுதிகளில், பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. 

 புயல் காரணமாக நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் கடல் நீரும், மழை நீரும் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

புயல் பாதிக்கும் என கண்டறியப்பட்ட கடலோர மாவட்டங்களில் 900 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாம்களில் 90 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். 

நாகை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள், பல்லாயிரம் மரங்கள், செல்போன் டவர்கள், கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது.  கோரதாண்டவமாடிய கஜா புயல் அதிகாலை 6.30 மணிக்கு வலுவிழந்தது. நாகையில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. காற்றில் கூரைகள் அடித்து செல்லப்பட்டதால் வீடுகளில் மழை நீர் புகுந்து வீடுகளும் வெள்ளத்தில் மிதந்தது.

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த தென்னந்தோப்புகள் சேதமானது. இவற்றில் 1 லட்சம் தென்னைமரங்கள் சாய்ந்தது.  

காரைக்காலில்   பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில்  உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. 37 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டு 70 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மரங்கள், 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்ததால்  போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு டூவீலர் கூட  செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து  கிடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் கனமழையுடன் 60 கி.மீ வேகத்தில் புயல் காற்று சுழன்றடித்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.  புயலினால் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது. மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 60 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கொடைக்கானல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதன்காரணமாக கொடைக்கானல் - பழநி சாலை, கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் ஏராளமான மரங்கள் முறிந்தும், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் 2 மலைச்சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

கொடைக்கானல் மச்சூர் அருகே அரசு பஸ் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 50பயணிகள் உயிர் தப்பினர். மன்னவனூரில் பாலத்துக்காக தோண்டப்பட்ட வாய்க்காலில் சிக்கிய பஸ்சை சுமார் 3 மணி நேரத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.   

இதேபோல் கொடைக்கானல் சிவனடி சாலை, அண்ணா சாலை, ஏரிச்சாலை, அப்பர்லேக் சாலை, சாய்பாபா பங்களா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் கொடைக்கானல் நகர் பகுதியில் நாள் முழுவதும் மின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்த புயல் காரணமாக நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை, புயல் பாதிப்புக்கு வீடி இடிந்தும் மின்சாரம் தாக்கியும் 51 பேர் உயிர் இழந்துள்ளனர். 

கஜா புயல் நாகை -  வேதாரண்யம் இடையே கரையை கடந்து விட்டது. என்றாலும், ராமநாதபுரம்  மாவட்டம், பாம்பன், ராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை கடந்து திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கேரளா வழியாக  படிப்படியாக அரபிக்கடலுக்கு கடந்து சென்றது. சென்ற வழியெங்கும் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரியில் கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. இதனால், கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாஸில் இருந்து புறப்பட்டு கொக்கு பார்க், தாவரவியல் பூங்கா அருகிலுள்ள உப்பனாறு கால்வாய், சின்ன வாய்க்கால் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.

மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு:

கஜா புயல் கரையை கடந்து அரபிக் கடலுக்கு போய்விட்ட நிலையில் அடுத்த  கட்டமாக வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம்  உருவாகி, இது புயல் சின்னமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்,  19ம் தேதி முதல் சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் தாக்குதலால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் மரம் விழுந்தும் 51 பேர் பலியானார்கள். 

நாகை உள்ளிட்ட பல மாவட்ட மீனவர்கள் 4 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. படகுகளை துறைமுகங்களிலும், முகத்துவாரங்களிலும் பாதுகாப்பாக நங்கூரம் போட்டும் கயிறுகட்டி நிறுத்தியும் இருந்தனர். இந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நூற்றுக்கணக்கான படகுகள் உடைந்து நீரில் மூழ்கியது. 

காரைக்கால் துறைமுகத்தில் மணல் தூர்வாரும் பணிக்கு தனியார் கப்பல் 2 தினங்களுக்கு முன் காரைக்கால் வந்தது. புயல் நாகை அருகே கரையை கடக்க போகிறது என்பதால் அந்த கப்பல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டது. ஆனாலும் பலத்த ஆக்ரோஷத்துடன் இரவு கரையை நோக்கி வந்த கஜா புயலில் அந்த கப்பல் அடித்து வரப்பட்டு தமிழக எல்லையான மேலவாஞ்சூர் அருகே தரை தட்டி நின்றது.  அந்த கப்பலில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது.

சார்ஜாவில் இருந்து அதிகாலை  திருச்சி வந்த விமானத்தை, புயல் காரணமாக தரையிறங்க வேண்டாம் என்றும் கொச்சிக்கு செல்லுமாறும் விமான நிலைய  கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் அந்த விமானம் திருச்சியில் தரையிறங்காமல் கொச்சிக்கு சென்றது. இதுபோல  சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ  விமானம் தரையிறங்காமல் 5 முறை வட்டமடித்த பின்னர் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி சென்றது.

by Mani Bharathi   on 17 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.