கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளார்.
இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கஜா புயல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் நாகபட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கவர்னர் பார்வையிட்டார்.
அப்போது மக்கள் அடையும் இன்னல்களையும் பார்த்தார். இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர கவர்னர் தனது ஒரு மாத சம்பளமான நவம்பர் மாதத்தின் சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
|