LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம்: யாருக்கும் சலுகை அளிக்கவில்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

"நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இணையதள ஒப்பந்தப்புள்ளியில் எப்படி முறைகேடு நடைபெறும்? ஒட்டன்சத்திரம், அவினாசி, தாராபுரம் சாலை ஒப்பந்தப்புள்ளி உறவினருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறினர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே யார் ரத்த உறவினர்கள், யார் நெருங்கிய உறவினர்கள் என்பது விளக்கப்பட்டு இருக்கிறது. அதில், எந்த வகையிலும் ஒப்பந்தப்புள்ளி பெற்றவர்கள் இடம்பெறவில்லை. 

உலக வங்கி நடைமுறையின்படி தான் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு உள்ளது. இதில், அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் டி.என்.ஆர்.எஸ்.பி. ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தத்த தொகையைவிட அவர்கள் அதிக தொகையை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் என்ன பதில் சொல்ல இருக்கிறார்கள் என்று காத்திருக்கிறேன்.  

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் அவதூறு பரப்புகின்றனர். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என்று மக்களும் கருதுகின்றனர், நானும் அதையே கருதுகிறேன். 

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மக்களும் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களில் கயிறுகள், தேங்காய் தொட்டிகள் போன்ற பழைய பொருட்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களில், கொசு உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்துகளை அடித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மட்டும் அரசு 14,719 கோடி ரூபாய் செலவழிக்கிறது. மேலும், அகவிலைப்படியும் உயருகிறது. அதற்காக அவர்களுக்கு 1600 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 

தமிழக அரசுக்கு நிதி ஆதாரம் இல்லை. நிதிச் சுமை இருக்கிறது என்பது அவர்களுக்கும் நன்றாக புரியும். அதனால், துறைசார்ந்த செயலாளர்களும், அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்." 

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

by Mani Bharathi   on 20 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.