LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு ! வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு !

தமிழ்நாட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் பெரிய வெங்காயம் லாரிகளில் வருகிறது.

 

தற்போது கர்நாடகா ஆந்திராவில் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் வெங்காய தேவைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. அங்குள்ள நாசிக் பகுதியில் இருந்து தான் சென்னைக்கும் அதிக அளவில் வெங்காயம் வருவது வழக்கம்.

 

ஆனால், நாசிக் வெங்காயம் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் லாரிகள் ஓடாததால் போதிய வெங்காயம் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. இதனால் கிலோ 30 ரூபாய்க்கு உள்ள வெங்காயம் 2 நாளில் இருமடங்காக உயர்ந்து விட்டது.

 

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் இன்று 1 கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு கடைக்காரர்களுக்கு வழங்கினர். இதை வாங்கி விற்கும் கடைக்காரர்கள் ரூ.68 முதல் ரூ.70 வரை விற்பனை செய்தனர். சிறிய வெங்காயம் கிலோ ரூ.50–க்கு விற்கப்பட்டது.

 

வெங்காயம் விலை உயர்வு குறித்து கடைக்காரர்கள் கூறுகையில், 50 கிலோ வெங்காய மூட்டை ரூ.1,600–ல் இருந்து ஒரே நாளில் ரூ.2,800 ஆக உயர்ந்தது அதிர்ச்சியாக உள்ளது.

 

வெங்காய மூட்டையை 2 நாள் ஸ்டாக் வைத்திருந்த மொத்த வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்திருக்கும். 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை உள்ள வெங்காயம் இப்போது ரூ.70 முதல் 75 வரை விற்கப்படுகிறது.

 

நாசிக் வெங்காயத்தை நம்பியே பல மாநிலங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை நிறுத்த சொல்லி வியாபாரிகள் கேட்டனர்.

 

ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. அதனால் தான் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து விட்டது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

by Swathi   on 13 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.