|
|||||
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு ! வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு ! |
|||||
தமிழ்நாட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் பெரிய வெங்காயம் லாரிகளில் வருகிறது.
தற்போது கர்நாடகா ஆந்திராவில் பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் வெங்காய தேவைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. அங்குள்ள நாசிக் பகுதியில் இருந்து தான் சென்னைக்கும் அதிக அளவில் வெங்காயம் வருவது வழக்கம்.
ஆனால், நாசிக் வெங்காயம் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் லாரிகள் ஓடாததால் போதிய வெங்காயம் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. இதனால் கிலோ 30 ரூபாய்க்கு உள்ள வெங்காயம் 2 நாளில் இருமடங்காக உயர்ந்து விட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் இன்று 1 கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு கடைக்காரர்களுக்கு வழங்கினர். இதை வாங்கி விற்கும் கடைக்காரர்கள் ரூ.68 முதல் ரூ.70 வரை விற்பனை செய்தனர். சிறிய வெங்காயம் கிலோ ரூ.50–க்கு விற்கப்பட்டது.
வெங்காயம் விலை உயர்வு குறித்து கடைக்காரர்கள் கூறுகையில், 50 கிலோ வெங்காய மூட்டை ரூ.1,600–ல் இருந்து ஒரே நாளில் ரூ.2,800 ஆக உயர்ந்தது அதிர்ச்சியாக உள்ளது.
வெங்காய மூட்டையை 2 நாள் ஸ்டாக் வைத்திருந்த மொத்த வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்திருக்கும். 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை உள்ள வெங்காயம் இப்போது ரூ.70 முதல் 75 வரை விற்கப்படுகிறது.
நாசிக் வெங்காயத்தை நம்பியே பல மாநிலங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை நிறுத்த சொல்லி வியாபாரிகள் கேட்டனர்.
ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. அதனால் தான் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Swathi on 13 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|