பத்திரிகை மற்றும் ஒளிபரப்பு துரையின் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க போவதாக சமீபத்தில் இந்திய வர்த்தகதுறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள, உள்துறை அமைச்சகம், இதனால் எதிர்காலத்தில், அன்னிய சக்திகள் இந்தியாவின் உள்விவகாரம் மற்றும் அரசியல் முடிவுகளில் தலையிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து கடந்த 16–ந்தேதி அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் திட்டம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமும், ஊடக துறையில் அன்னிய நேரடி முதலீடு சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, டிராய் மற்றும் இந்திய பத்திரிகைக்குழு ஆகியவற்றின் ஆலோசனையை நாடி உள்ளது.
|