இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய திட்டக்கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தினமும் ரூ.27.20 (மாதத்துக்கு ரூ.816) மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.33.33 (மாதத்துக்கு ரூ.1000) செலவிலும் ஒருவர் வாழ முடியும் என்றால் அவர் ஏழை அல்ல. அதற்கு கீழான நிலையில் வாழ்பவர்களே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழுகிறவர்கள் என மத்திய திட்டக்கமிஷன் குழு வரையறை செய்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 2004–05–ம் ஆண்டில் இந்தியாவில் 40 கோடியே 71 லட்சம் பேர் ஏழைகள் என்றும், அந்த எண்ணிக்கை 2011–12–ம் ஆண்டில் 26 கோடியே 93 லட்சம் என குறைந்து விட்டது எனவும் மத்திய திட்டக்கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் விண்ணைத் தொடும் விலைவாசியில், ஒரு நபரால் கிராமப்புறங்களில் தினமும் ரூ.27.20–லும், நகர்ப்புறங்களில் ரூ.33.33–லும் வாழ முடியுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.
|