LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக் கழகங்கள் அதிரடி உத்தரவு!

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தமிழக பல்கலைக்கழகங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளன. 

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரிய தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. 

தேசிய தகுதித் தேர்வவான நெட் அல்லது, மாநிலத் தகுதி தேர்வான செட் இவற்றில் தேர்ச்சி பெற்றால் தான், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற அனுமதிக்கப்படும் என மானியக்குழு அறிவித்து உள்ளது.

தகுதி தேர்வு எழுதாதவர்கள் 2009 அல்லது அதற்கு முன்னர் எம்.பில் அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவைப் பின்பற்றி சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா, பெரியார் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை தங்களது இணைப்பில் உள்ள கல்லூரிகளுக்கு மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளன.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 2,500 பேராசிரியர்கள் தகுதியற்றவர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் என சென்னை பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் சுமார் 30 சதவீத பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிகளின்படி, தகுதியற்றவர்கள் என்பதை கண்டறிந்த சென்னை பல்கலைக்கழகம் அதிர்ச்சி அடைந்தது.

நகர்ப்புறங்களில் உள்ள கல்லூரிகள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டுள்ளதும், புறநகரில் நிலைமை மோசமாக உள்ளதையும் சென்னை பல்கலைக்கழம் தனது ஆய்வில் உறுதிப்படுத்தி உள்ளது

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகம், தங்களது இணைப்பில் உள்ள 90 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் அடுத்த நெட் அல்லது செட் தேர்வெழுதி தேர்ச்சி பெற உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறி உள்ளது. குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் கிடைக்காததற்கு காரணம் என விளக்கம் அளித்து உள்ளது.

மொத்தமுள்ள 8,500 பேராசிரியர்களில் சுமார் 2,500 பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி தகுதி பெறாதவர்கள் என கூறி உள்ளது. 

பல்கலைக்கழக மானிய குழு அமல்படுத்தியுள்ள விதிகளின்படி, உதவி பேராசிரியர்களுக்கு ரூ.65,000 சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பெரும்பாலான கல்லூரிகளில் ரூ.10,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே தான் தகுதிவாய்ந்த பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்து உள்ளது.

by Mani Bharathi   on 28 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.