இந்தியாவில் தபால் துறையின் மூலம், கடித பரிமாற்றம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு புதிய வசதிகளை இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒரு பகுதியாக இந்திய தபால் துறை வங்கி வர்த்தகத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது.
இந்திய தபால் துறை சார்பில் நடைபெற்று வரும் நிதியாண்டில் ரூ. 1,300 கோடி மதிப்பில், இந்திய தபால் வங்கியினை நாடு முழுவதும் துவக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில் இந்த நிதியாண்டில் புதிய வங்கிகளை துவக்க உரிமம் கோரி பல்வேறு நிறுவனங்களுடன், இந்திய தபால்துறையும் விண்ணப்பித்துள்ளது. உரிமம் கிடைத்ததும், முதல்கட்டமாக தலா ரூ. 500 கோடி முதலீட்டில் 50 கிளைகளையும், அடுத்த ஐந்தாண்டுகளில் 150 கிளைகளையும், படிப்படியாக நாடு முழுவதும் ஊரக மற்றும் புறநகர் பகுதிகளிலும், திறக்கப்பட உள்ளன. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு போட்டியாக நெட் பேங்கிங் முறையும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
|