இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புஜாரா சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று துவங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியில் சச்சின், சேவாக் ,காம்பிர்,யுவராஜ்,தோனி போன்ற முன்னணி வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தாலும் இளம் வீரர் புஜார நிலைத்து நின்று சதம் அடித்துள்ளார்.மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த அஸ்வின் அரை சதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 266 ரன் எடுத்தது.புஜார மற்றும் அஸ்வின் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.இன்றைய ஆட்டத்தில் புஜார இரட்டை சதமும்,அஸ்வின் சதம் அடிப்பார்கள் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
|
Pujara cracked his 2 nd Test century as India recovered from a precarious situation to restore the balance in the second cricket Test against England.Ashwin scored a well-deserved half-century. The early part of the day England who sent back Gambhir 4 runs, Virender Sehwag 30 runs ,Sachin 8 runs, Virat Kohli 19 runs ,Yuvraj Singh 0,Dhoni 22 runs.India get 266 Runs for 6 Wickts at First Innings, First Day.
|