அகத்தில் உள்ளது இறை நிலை! ம.செந்தமிழன் வேதம் ஓதுவதிலும், சடங்குகளிலும் இல்லை இறைநிலை. அது ஒவ்வொரு உயிரின் அகத்தில் உள்ளது என்பதை உரைத்தவர்களே சித்தர்கள். சிவவாக்கியச் சித்தர், ஓர் ஆரிய எதிர்ப்புப் போராளியாகவே தமது பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை: ”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ மாத்திரைப்போ தும்முள்ளே யறிந்துதொக்க வல்லீரேல் சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் ஆலம்உண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே காலன் என்று சொல்லுவீர் கனவிலும் அஃதில்லையே கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு உம்முளே ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில் போதகங்களான எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் மாதிருந்தவிந்து எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் ஏதிலெச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் மீன்இருக்கும் நீரலோ மூழ்குவதும் குடிப்பதும் மான்இறச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும் இட்டகுண்டம் ஏதடா இருக்குவேதம் ஏதடா சுட்டமண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப் பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர் வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம் தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல் தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே. நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ -சிவவாக்கியச் சித்தர்
|