ஜனவரி-12 உலகத் தமிழ்நாள்
சட்டசபையில் ஆளுநர் உரையாற்றியபோது ஜனவரி 12-ஆம் நாள் உலகத் தமிழ் நாளாக கொண்டாடப்படும் என்று கூறினார் மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், *உயர் கல்வித் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
*பத்து வருடங்களில் தமிழ்நாடு, குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். *தனியார் நிகழ்ச்சிகளிலும் மாநில அரசின் பாடலாக அறிவிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். *பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் நூலகங்கள் மேம்படுத்தப்படும். *நீட் தேர்வு மற்றும் பிற நுழைவுத்தேர்வுகள் உயர்கல்விக்கு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. *அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். மற்றும் பிற முக்கிய அறிவிப்புகளையும் தனது உரையில் குறிப்பிட்டார் ஆளுநர் அவர்கள்.
|