LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)

ஜே.சி.குமரப்பா என்னும் பொருளியலாளர் என்னும் தமிழரே காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர். உண்மையில் காந்தியப் பொருளாதாரம் என்பது குமரப்பப் பொருளாதாரமே. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் E = MC2 என்னும் கோட்பாடு இயற்பியல் உலகின் அடிப்படைவிதிகளை எல்லாம் புரட்டிப்போட்டதைப்போல இவரது தாய்மைப் பொருளாதாரம் என்னும் பொருளியல் உலகின் அடிப்படைகளை அசைக்கும்திறன் கொண்டது.

ஆடம் சுமித்தின் கட்டுப்பாடற்ற பொருளியலும் காரல்மார்கின் பொதுவுடைமைப் பொருளியலும் கோலாச்சிக்கொண்டிருந்த கடந்த நூற்றாண்டில் இடைப்பகுதியில் திருநெல்வேலியில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் கிறித்துவ தேவாலய பூசகராக இருந்த ஒருவரின் பெயரனாக தஞ்சையில் பிறந்து அமெரிக்க தேவலாயத்தில் ஆடம் சுமித்தின் பொருளாதாரத்தை மறுத்து உரையாற்றி, அதன் விளைவாக தாய்மைப் பொருளாதாரம் என்னும் அறம்சார் பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கியவர் சோசப் செல்லத்துரை கொர்னீயசு என்னும் சோ.செ.குமரப்பா (J.C.Kumarappa, 1892-01-4 : 1960-01-30).

கூட்டுக்கொள்ளைப் பொருளாதாரத்தால் உலகம் சீரழிந்து கொண்டிருக்கும் இந்நாளில் அவரது தாய்மைப் பொருளாதாரத்தின் தேவையை பலரும் உணரத் தொடங்கி உள்ளனர்.  இயற்பியல் உலகில் ஆல்பர்ட் ஐன்சுடின் உருவாக்கிய சார்பியல் கோட்பாட்டிற்கு இணையான ஆழமும் நுட்பமும் கொண்டது குமரப்பாவின் தாய்மைப் பொருளாதாரம்.  அவரதுசெல்வம் (Wealth) = உழைப்பாளர் (Employee) + வளம் (Money) என்னும் பொருளாதாரக் கோட்பாடானது இன்றைக்கு அமெர்த்திய சென்னும் சூமேக்கரும் பேசுகின்ற நலம்சார் பொருளாதாரத்தின் ஆணிவேராகும்.

அவரது சிந்தனைகளை மேன்மேலும் ஆழ்ந்து கற்பதன் வழியாக அறம்சார் பொருளியல் வாழ்க்கையை மேற்கொள்ள முயல்வோமாக!

by Swathi   on 08 Apr 2016  0 Comments
Tags: JC Kumarappa   JC Kumarappa Tamil   JC Kumarappa Articles   Gandhian Economic Thoughts   Gandhian Economic   ஜே.சி.குமரப்பா   ஜே.சி.குமரப்பா வரலாறு  
 தொடர்புடையவை-Related Articles
ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்) ஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.