கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை,திருவள்ளுவர் சிலை இடையே நடை பாலம்
விவேகானந்தர் பாறை கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ளது.விவேகானந்தர் கன்னியாகுமரி வந்தபோது அவர் இந்த பாறையில் தியானம் செய்ததால் அவர் நினைவாக இந்தப் பாறையில் மணிமண்டபம் 1972-ல் திறக்கப்பட்டது. அதன் பிறகு அது விவேகானந்தர் பாறை என்றே அழைக்கப்பட்டது.
133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை மிகச்சிறந்த தமிழர் படைப்பான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசினால் கட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கிய இச்சிலையின் பணி 2000 ஆண்டில் முடிவு பெற்று ஜனவரி 1 அன்று திறக்கப்பட்டது.
இப் புகழ்மிக்க பகுதிகளுக்கிடையே ரூ. 37 கோடியில் கடல்சார் நடைபாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|