|
|||||
கவிஞர் புலமைப்பித்தன் காலமானார் |
|||||
கவிஞர் புலமைப்பித்தன் காலமானார் சிறந்த கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமாகஅறியப்பட்டவர் புலமைப்பித்தன். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த புலமைப்பித்தன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர்,1935 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று பிறந்தார். இவரது ஊர் கோயம்புத்தூர் ஆகும். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார் புலமைப்பித்தன். தமிழக சட்ட மேலவை துணைத் தலைவராக, அதிமுக அவைத்தலைவராக இருந்துள்ள இவர்,எம். ஜி.இராமச்சந்திரன் அவர்களால் அரசவைக் கவிஞராகவும் அமர்த்தப்பட்டுள்ளார். கருத்துள்ள திரை இசைப்பாடல்களை சமூகத்திற்குத் தந்து சென்றுள்ளார் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளையும் பெற்றவர். "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"என்று தத்துவம் சொன்னவர். "ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்"என்ற தாராள சிந்தை விதைத்தவர்.உன்னால் முடியும் தம்பி (1988) என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இவர் எழுதிய "நஞ்சை உண்டு புஞ்சை உண்டு"என்ற பாடல் இன்றைக்கும் பொருந்தும் கருத்துகள் நிறைந்தது. மேலும் இவர் நந்தா, ஜெயம்,இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அரிமா நம்பி,எலி போன்ற படங்களிலும் கவித்திறனை பாடலாக்கி தந்து சென்றுள்ளார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. |
|||||
by R.Gnanajothi on 10 Sep 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|