குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கென தனி அலைபேசி எண் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அறிவிப்பு
கேரளப் பெண் விஸ்மயா வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தையும் நாட்டில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
கேரள முதல்வர் தனது கீச்சக(Twitter) பக்கத்தில்,திருமண நடை முறைகளில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும், பெற்றோர் சொத்துக்களின் பெருமையைக் காட்டும் கண்காட்சியாக திருமணம் இருக்கக்கூடாது, பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணை கொடுத்து அவர்களை வியாபார பொருட்களாக்க கூடாது, ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தும் சமுதாயமே நியாயமான சமுதாயமாக இருக்கும். அநீதிகளை மாற்ற அரசு மக்களுடன் தோளுடன் தோள் சேர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் கேரளப் பெண்கள் 9497999955 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
|