LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
திருக்குறள்  -  காலமறிதல்
குறள்: 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
குறள் விளக்கம்
 
குறள்: 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
குறள் விளக்கம்
 
குறள்: 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
கால மறிந்து செயின்.
குறள் விளக்கம்
 
குறள்: 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
குறள் விளக்கம்
 
குறள்: 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
குறள் விளக்கம்
 
குறள்: 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள் விளக்கம்
 
குறள்: 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
குறள் விளக்கம்
 
குறள்: 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
குறள் விளக்கம்
 
குறள்: 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
குறள் விளக்கம்
 
குறள்: 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
குறள் விளக்கம்