|
||||||||
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து |
||||||||
![]() மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி தமிழ் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய முன்னெடுப்புகளை விரிவாக எடுத்துரைத்தேன் ஒரு கோரிக்கையாகவும் ஆவணப்படுத்தி வழங்கினேன்.தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடம் சந்தித்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டார். உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாடு, உலகத் தமிழ் வளர்ச்சிமன்றத்துடன் இணைந்து நாம் வழங்கும் ஆண்டுக்கு 40000 (நாற்பதாயிரம்) திருக்குறள் நூல்கள் வீதம் அடுத்த பத்து ஆண்டுகளில் வழங்கவிருக்கும் செயல்பாடு , அதற்கான இலவச முற்றோதல் பயிற்சி, மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறையின், கல்வித்துறையின் தேவையான ஒத்துழைப்பு என்று விரிவாக உரையாடியது பெரும் நம்பிக்கையைத் தந்தது. கட்சி அரசியலுக்கு அப்பால் ஆழ்ந்த வாசிப்பும், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உடைய, மக்கள் பணியில் பெரும் நம்பிக்கையோடு பயணிக்கும் நாம் பெரிதும் மதிக்கும் அன்பிற்குரிய திரு.சி. மகேந்திரன் தோழர் அவர்களை சந்தித்து Thirukkural Translations In World Languages நூலை வழங்கி உரையாடினோம். குழுவின் பெரும் முயற்சியை பாராட்டினார். திருக்குறள் 2030 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். பல்துறை திறமைகொண்ட திரை ஆளுமை, சொற்பொழிவாளர், ஓவியர், "திருக்குறள் 100" என்று 100 திருக்குறளை எடுத்துக்கொண்டு நான்கு மணி நேரம் உரை நிகழ்த்தி பரப்புரை செய்துவரும் திரு.சிவக்குமார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டக்குழு உருவாக்கிய "Thirukkural Translations in World Languages" நூலை வழங்கினேன். வாழ்த்தினார். உலகத் தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்:
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 01 Jun 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|