ஆறாவது ஐபிஎல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 17.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் யூசுப் பதான் 35 பந்துகளில் 49 ரன் குவித்தார்.
|