LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16

 

மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16

அறிமுகம்:

    அனைத்து சித்த மருத்துவர்களும். சித்த மருத்துவ மாணவர்களும் அறிந்த மிகச்சிறந்த மருத்துவர் இவர். சித்த மருத்துவத்தில் ‘குழவி மருத்துவம்’ என்ற ஒரு பிரிவைத் தனிப்பட்ட முறையில், பயிற்சி செய்யலாம் என்று அனைவருக்கும் நம்பிக்கையூட்டியவர் இவர். சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவங்களில் ஆழ்ந்த அனுபவமும், அறிவும் பெற்றவர். நாடிநடை, முக்குற்றயியல், நீர்க்குறி போன்ற சித்த மருத்துவ நோய்க்கணிப்பு முறைகளில் தனித்துவம் பெற்றவர் இவர். அவரே மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் ஆவார்.

குழந்தை மருத்துவத்தில் ஆர்வம்:

    குழந்தை மருத்துவம் என்ற துறையானது மிகப் பெரியது. ஆன்டிபயாடிக் மருந்துகள் பெருகிய பிறகு சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவத் துறை கேட்பாரற்று போனது. அதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே  குழந்தை மருத்துவத் துறையைத் தான் எடுத்துப் படித்ததாக மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவத்தைக் கள ஆய்வு செய்வதற்காக நாட்டின் பல்வேறு ஊர்களுக்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

தொலைந்து போன பாரம்பரியம்:

    நம்முடைய தமிழ் சமுதாய பாரம்பரியத்திலேயே குழந்தைகளின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். நடைவண்டி வைத்து குழந்தைகளை நடக்கப் பழக்கும் வழக்கம் இன்று தமிழர்களிடையே காணாமல் போய் விட்டது. தமிழர்கள் அந்த நடைவண்டியைச் செய்வதற்கென்றே தனிமரம் (நுணா மரம்) வைத்திருந்தனர். சங்க இலக்கியம் குறிப்பிடும் ‘சிறுதேர்’ என்ற விளையாட்டும் கூட நடைவண்டியைக் குறித்ததே. தொட்டில் கட்டும் பழக்கம், மரக்குதிரை விளையாடும் பழக்கம் போன்றவை அறிவியல் ரீதியாகக் குழந்தைகளுக்கு நன்மையைப் பயப்பவை. இன்று அவற்றை மறந்து விட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என வருத்தம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள்.

சித்த மருத்துவத்தில் குழந்தை மருத்துவம்:

    சித்த மருத்துவத்தில் கிட்டத்தட்ட 108 நிதானங்கள், 60 உட்பிரிவுகள் என 2000. 3000 பாடல்கள் குழந்தை மருத்துவத்தைக் குறித்தே உள்ளன. அதிக நோய்களுக்கு எளிமையான மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குலச்சல்’ என்ற பகுதியில், குழந்தைகளுக்குக் கொடி சுற்றி விட்டால் அதற்கு முடக்கத்தான் ஒரு கையளவு, தேங்காய்ப்பூ, சீரகம் போன்றவற்றைச் சேர்;த்து வேகவைத்து அதன் சாற்றைக் கொடுக்கின்றனர். அலோபதி மருத்துவத்தால் கூட குணப்படுத்த முடியாததைச் சித்த மருத்துவத்தின் இச்சாறு குணப்படுத்திவிடுகிறது.

இன்றைய வளர்ப்பு முறை:

     இன்று குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கிறோம். உடலிற்கு ஆரோக்கியத்தைத் தரும் விளையாட்டுகளை கற்றுக் கொடுக்காமல் கைப்பேசியைக் கொடுத்து அதில் விளையாடச் சொல்கிறோம். 24 மணி நேரமும் குழந்தைகளுக்கு டயாப்பரை மாட்டி விடுகிறோம். இதனால் பல நோய்த் தொற்றுகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. முன்னோர்கள் சொல்லிச் சென்ற சிறந்த முறைகளை மறந்துவிட்டு நாகரீகம் என்ற பெயரில் நோயை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள்.

சில சித்த மருத்துவ உணவு முறைகள்:

    பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் பாதிப்பது நிமோனியா காய்ச்சல் ஆகும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் போது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெற்ற உடலாக மாறுகிறது. உலகிலேயே சிறந்த நோய்த் தடுப்பு ஆற்றல் கருவேலம்பிசினில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவேலம்பிசினை சர்க்கரையோடு சேர்த்து சவலக் குழந்தைகளுக்கு அதாவது உடல் தேறாத குழந்தைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே போல் நேந்தரங்காய் எனப்படும் காயை வட்ட வட்டமாகச் சீவி வெயிலில் காய வைத்து அரைத்துப் பொடி செய்து, தண்ணீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்கு உண்டாகும் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள்.

செய்யக்கூடாதவை:

    இரண்டு வயது மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை, துளசி போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. அதே போல் எந்த மருந்தாக இருந்தாலும் சங்கில் வைத்து ஊற்றக் கூடாது, தாயின் மார்புக் காம்பைச் சுற்றி மருந்தைத் தடவி குழந்தைகள் பால் அருந்தும் போது அதன் வழியாகக் கொடுக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்கு எவ்வித பக்க விளைவுகளும் வராது. ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் என்னதான் சாப்பிட்டாலும் 6 வயது வரை மாத்திரைகளை அப்படியே விழுங்கும் படியாகக் கொடுக்கக் கூடாது, எந்த மாத்திரையாக இருந்தாலும் தண்ணீரில் கலந்தே கொடுக்க வேண்டும். என்றாவது குழந்தைகளுக்கு அதிக சாப்பாடு கொடுத்துவிட்டால் ஓமத்தண்ணீரை கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாகச் சோம்பு வேக வைத்த தண்ணீரைக் கொடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். பிஸ்கட்டுகள், தேநீர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு அறவேத் தடுக்க வேண்டும்.

    6 மாதத்திலிருந்தே தினமும் ஒரு காயைச் சாப்பிட வைத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். பச்சை பச்சையான பேதிக்கு வலம்புரிக்காயை வேகவைத்து அதன் சாற்றை 10 சொட்டு கொடுக்கலாம். இரத்தமாகப் பேதி போனால் பொடுதலை கொடுக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். ஜீரகத் தண்ணீர் கொடுக்கலாம். நெய்யை உருக்கி உணவுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆப்கானிஸ்தானில் எலும்பும் தோலுமாக இருந்த பல குழந்தைகளைக் காப்பாற்றியது  முறிங்கா இலையும், அதன் சாறும் ஆகும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதை மறந்து விட்டு, நாகரிகம் என்ற பெயரில் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள்.

ஒருங்கிணைக்கும் முயற்சி:

    மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு உதவும் வகையில் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாக எழுதி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். வார்த்தைகள் புரியவில்லை என்று மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் சித்த மருத்துவம் பயன்பட வேண்டும் என்ற வகையிலும் இம்;முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இன்னும் நூலாக்கம் குறித்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

 

 

by Lakshmi G   on 08 Apr 2021  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.