LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

மெய்விளக்கக் கல்வி

 

மனித குலத்தில் காலத்தால் இடத்தால் அவ்வப்போது ஏற்பட்ட தேவையுணர்வால், ஏற்பட்ட செயல்களும் கருத்துகளும் பல ஆயிரமாயிரம் தலைமுறைகளாக, சிந்தித்துத் திருத்தம் பெறாத காரணத்தால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞான அறிவால், விரைவு வாகன வசதிகளால், துரிதமான செய்தி போக்குவரத்து சாதனங்களால், உலக மக்களுடைய பொருளாதாரம் அரசியல் இரண்டும் ஒன...்றோடு ஒன்று ஊடுருவி இணைந்து கொண்டு வருகிறது. 
இக்காலத்திற்கு ஏற்ப தேவையற்ற பழக்கப் பதிவுகளை வாழ்வில் புகுத்தி மனித குலம் பிணக்கொழித்து அமைதியில் வாழ வேண்டும். இம்மாற்றம் வெற்றியாக மனித குலச் சீரழிவு இன்றி அமலுக்கு வரவேண்டுமெனில் மெய்விளக்கக் கல்வி அனைத்து நாடுகளிலும் பள்ளி மாணவ வயதிலிருந்தே அறிந்து கொள்ள ஏற்றபடி பாடத்திட்டங்களில் பரவ வேண்டும். இப்பெரிய மாற்றம் சமுதாய சீர்திருத்தமாக பிணக்கின்றி, போரின்றி நடைபெற சில விஞ்ஞானிகள், கல்வித்துறையினர், ஆன்மீக அறிஞர்கள் இன்று ஒன்று கூடி பொறுப்பேற்க வேண்டும். 
போருக்காகவும் போரச்சத்தோடும் செலவிடும் பொருள், மனித முயற்சி இவற்றில், நூற்றில் ஒரு பங்கு செலவிட்டாலே சில ஆண்டு காலத்திற்குள் அமைதியான முறையில் சமுதாயச் சீர்திருத்தமும் உலக அமைதியும் காணலாம். எல்லாவிதமான கல்விகளையும் முழுப்பயன் விளைக்கச் செய்யும் இம்மெய் விளக்கக் கல்விக்கு வித்திடுவதே உலக சமுதாய சேவா சங்கமும், அதன் பயிற்சி முறையான மனவளக் கலையுமாகும். இவற்றின் மதிப்புணர்ந்து நமது கடமைகளை ஆற்றி மன நிறைவு பெறுவோம். நம்மை உருவாக்கி வளர்த்து வாழவைக்கும் இயற்கைக்கும், பொருள், கல்வி, பாதுகாப்பு, தொண்டு இவற்றால் நமது வாழ்வுக்குச் சிறப்பளிக்கும் மனித சமுதாயத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை இதுவே.

மனித குலத்தில் காலத்தால் இடத்தால் அவ்வப்போது ஏற்பட்ட தேவையுணர்வால், ஏற்பட்ட செயல்களும் கருத்துகளும் பல ஆயிரமாயிரம் தலைமுறைகளாக, சிந்தித்துத் திருத்தம் பெறாத காரணத்தால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞான அறிவால், விரைவு வாகன வசதிகளால், துரிதமான செய்தி போக்குவரத்து சாதனங்களால், உலக மக்களுடைய பொருளாதாரம் அரசியல் இரண்டும் ஒன...்றோடு ஒன்று ஊடுருவி இணைந்து கொண்டு வருகிறது. 

 

இக்காலத்திற்கு ஏற்ப தேவையற்ற பழக்கப் பதிவுகளை வாழ்வில் புகுத்தி மனித குலம் பிணக்கொழித்து அமைதியில் வாழ வேண்டும். இம்மாற்றம் வெற்றியாக மனித குலச் சீரழிவு இன்றி அமலுக்கு வரவேண்டுமெனில் மெய்விளக்கக் கல்வி அனைத்து நாடுகளிலும் பள்ளி மாணவ வயதிலிருந்தே அறிந்து கொள்ள ஏற்றபடி பாடத்திட்டங்களில் பரவ வேண்டும். இப்பெரிய மாற்றம் சமுதாய சீர்திருத்தமாக பிணக்கின்றி, போரின்றி நடைபெற சில விஞ்ஞானிகள், கல்வித்துறையினர், ஆன்மீக அறிஞர்கள் இன்று ஒன்று கூடி பொறுப்பேற்க வேண்டும். 

 

போருக்காகவும் போரச்சத்தோடும் செலவிடும் பொருள், மனித முயற்சி இவற்றில், நூற்றில் ஒரு பங்கு செலவிட்டாலே சில ஆண்டு காலத்திற்குள் அமைதியான முறையில் சமுதாயச் சீர்திருத்தமும் உலக அமைதியும் காணலாம். எல்லாவிதமான கல்விகளையும் முழுப்பயன் விளைக்கச் செய்யும் இம்மெய் விளக்கக் கல்விக்கு வித்திடுவதே உலக சமுதாய சேவா சங்கமும், அதன் பயிற்சி முறையான மனவளக் கலையுமாகும். இவற்றின் மதிப்புணர்ந்து நமது கடமைகளை ஆற்றி மன நிறைவு பெறுவோம். நம்மை உருவாக்கி வளர்த்து வாழவைக்கும் இயற்கைக்கும், பொருள், கல்வி, பாதுகாப்பு, தொண்டு இவற்றால் நமது வாழ்வுக்குச் சிறப்பளிக்கும் மனித சமுதாயத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை இதுவே.

 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.