விரைவில் செல்போன் சேவைக்கான கட்டணங்கள் 15 சதவீதம் வரை உயரக் கூடும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வோடாஃபோன், பார்தி ஏர்டெல், லூப் மொபைல் போன்ற சில நிறுவனங்களின் அலைகற்றை உரிமம் அடுத்த ஆண்டுடன் காலாவதி ஆவதால், அவை ஏலத்துக்கு வரும் நிலை உள்ளது. அப்போது, இதற்கான ஏலத்தின் அடிப்படை விலை, 2008ல் இருந்தது போல, 11 மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், செல்போன் சேவை நிறுவனங்கள் தொலைபேசி கட்டணங்களை சுமார் 15 சதவீதம் வரை உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
|