|
|||||
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு |
|||||
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மைசூருக்கு மாற்றப்பட்டு அங்கு எவ்வித மின்னாக்கப் பணிகளும் இன்றி வெறுமனே இருந்த ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளை தமிழக அரசின் சென்னை தமிழ் கல்வெட்டுப் பிரிவிற்கு மாற்ற மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மைசூர் கல்வெட்டியல் துறையில் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65,000 கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடைய என்றும்,இந்தக் கல்வெட்டுகள் இன்றுவரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை தொழில் நுட்ப முறைகள் மூலம் பாதுகாக்கவும் மற்றும் தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என்று பெயர் மாற்றம் செய்யவும் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போதுமான ஆய்வாளர்களை நியமிக்கவும் சென்னை கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
|||||
by R.Gnanajothi on 21 Aug 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|