LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45

சோர்வினை (களைப்பு) அடக்கினால் (அலட்சியப்படுத்துவதால்) வரும் துன்பங்கள்

அளவிற்கு மீறிய, தொடர்ச்சியான உடல் உழைப்பினாலோ மன உழைப்பினாலோ சில நோய்களாலோ உடலில் சோர்வு ஏற்படும்.

உடலில் சோர்வு ஏற்பட்டவுடன் அதற்கானக் காரணங்களை அறிந்து அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் வேண்டும். அதனைப் பொருட்படுத்தாது விட்டு விட்டால் பல உடல் துன்பங்கள் தொடருவதாகச் சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒருபாடல்
            
“பேசிய இளைப் படக்கில்

பெருகிடு மேகங் குன்மம்

நாசஞ் செய் மூர்ச்சை யோடு

நளிர் தும்மல் குணங்க ளுண்டே”


உடலின் வேகங்கள் (இயங்கியல் நிகழ்வுகள்) எனப் பல பெரியோர்களால் கூறப்பட்ட இளைப்பினை (சோர்வு, களைப்பு) பொருட்படுத்தாது விட்டால் உடலின் வெப்பம் கூடும். மேக நோய் என்று சித்தர்களால் வகுக்கப்பட்ட நோய்கள் உருவாகும். முக்கியமாக இனிப்பு மேகமென்று சொல்லக் கூடிய சர்க்கரை நோய் தோன்றும்.

குன்மம் என்பது பல வயிற்று நோய்களைக் குறிக்கக் கூடிய சொல்லாகும். முக்கியமாக உணவுக்குழாய், வயிறு, குடல் போன்ற பகுதிகளில் அழற்சியும், புண்ணும் (Gastritis, Peptic ulcer) ஏற்பட்டிருக்கும் நிலையைக் குறிக்கும். இவற்றைப் போன்ற பல வயிற்று நோய்கள் சோர்வினைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் உண்டாகும்.  

தொடர்ச்சியாக ஒருவர் சொர்வினைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருப்பாரானால் திடீரென நினைவற்றுப் போய் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உள்ளத் தடுமாற்றம், குழப்பம், வாய்க் குழறல், தொடர்பற்ற வார்த்தைகளைப் பேசுதல் போன்றவையும் தொடரும்.

தவிர தும்மலை அடக்கினால் உண்டாகக் கூடிய தலைநோய்கள், இயக்க உறுப்புகள் (Organs of motor functions) மற்றும் உணர் உறுப்புகளின் (Organs of sensory functions) செயல் குறைவு, முக வாதம், குடலிறக்கம் (Her nia ) போன்ற நோய்களும் தொடரும் என அந்தச் சித்தர் பாடல் தெரிவிக்கின்றது.

சோர்வு ஏற்படத் தொடர்ச்சியான உடல் உழைப்பும் மன உழைப்பும் முக்கியக் காரணங்களாக இருந்தாலும், வெளியில் தெரியாத பல நோய்கள் முதலில் உடல் சோர்வினை மட்டும் ஏற்படுத்துகின்றன. எனவே காரணமின்றி உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறல் வேண்டும்.

முக்கியமான சில காரணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்

1. இரத்த சோகை (Anemia) – தற்போது பல தரப்பினருக்கும் பரவலாக ஏற்பட்டிருக்கும் நோய். குறிப்பாக இளம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டு அவர்களின் சோர்விற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

2. தொற்று நோய்கள் (Infectious diseases) பல தொற்று நோய்கள் உடலிற்குள் இருந்து வெளியில் தெரியாமல் சோர்வினை ஏற்படுத்துகின்றன. தற்போது அதிகமாகப் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்துக் கூடியதாகக் காசநோய் (Tuberculosis) உள்ளது. வெளியே பெரிய அறிகுறிகளைத் தோற்றுவிக்காமல் சோர்வினை மட்டுமே முதலில் ஏற்படுத்தக் கூடிய நோயாக இந்நோய் உள்ளது.

3. ஊட்டச்சத்துப் பற்றாக்குறை – போதுமான ஊட்டச் சத்துக்கள் உடலிற்குக் கிடைக்காமல் போவதால் பல நோய்கள் தொடரும். முதலில் உடல் சோர்வு ஏற்படும்.

4. உறக்கமின்மை (Sleep disorders)

5. கல்லீரல் செயல்பாடு குறைவு (Liver dysfunction)

6. தைராய்டுச் (Thyroid) சுரப்புக் குறைபாடு – தைராய்டுச் சுரப்புக் குறைவாக இருந்தாலும் (Hypo thyroidism) அதிகமாக இருந்தாலும் (Hyper thyroidism) சோர்வு ஏற்படும்.

7. சர்க்கரை நோய் (Diabetes mellitus) – பெரும்பாலும் சர்க்கரை நோயின் முதன்மையான அறிகுறியாக உடல் சோர்வு ஏற்படுகின்றது.

8. மன நோய்கள் – மன அழுத்தம் (Depression), மனப் பதட்டம் (Anxiety) போன்றவை உடல் சோர்வினை ஏற்படுத்தும்.

9. போதைப் பொருட்கள் – புகை, மது, போதை மருந்துகள்.   
         
இவை போன்றே பல நோய்கள் சோர்வு உண்டாகக் காரணமாகின்றன. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த நோய்களுக்கான பிற அறிகுறிகள் முதலில் வெளியே தெரியாமல் சோர்வினை மட்டுமே முதலில் உண்டாக்கக் கூடியதாக பல நோய்கள் உள்ளன. அவற்றுள் சில வகையான புற்று நோய்களும் அடங்கும்.

பலர் உடல் சோர்வு ஏற்பட்டு பலகாலம் கழித்துதான் மருத்துவ ஆலோசனை பெற வருகின்றனர். 50% பேர் உடல் சோர்வு ஏற்பட்டு ஒர் ஆண்டு கழித்துதான் மருத்துவ ஆலோசனை பெற வருவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

சோர்வு ஏற்பட்ட பின்பும் உழைத்துக் கொண்டிருந்தால் நோய்கள் உண்டாகும். போதுமான ஓய்வு எடுத்த பின்பும் சோர்வு தொடர்ந்தால் உடலில் ஏதோ நோய்கள் இருக்கலாம் என்று அறிந்து ஆலோசனை பெற வேண்டும்.

நலப்பயணம் தொடரும்........................
 

by Swathi   on 20 Jul 2015  0 Comments
Tags: Side Effects of Sleeping Less   Sleeping Less   Tired   Sorvu           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45 நலம் காக்கும் சித்த மருத்துவம் : சோர்வினை அடக்கினால் வரும் துன்பங்கள் – 45
உடல் சோர்வுக்கான டாப் 10 காரணங்கள் !! உடல் சோர்வுக்கான டாப் 10 காரணங்கள் !!
எப்போதும் உடல் சோர்வா இருக்கா.... அப்படினா இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க ........ எப்போதும் உடல் சோர்வா இருக்கா.... அப்படினா இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க ........
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.