|
|||||
விரைவில் வீடுகளுக்கும் மதிப்பெண் : தேசிய வீட்டு வசதி வங்கி அறிவிப்பு !! |
|||||
கட்டுமான நிறுவனங்கள் கட்டி விற்கும் வீடுகளுக்கு அவற்றின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக உள்ளதாக தேசிய வீட்டு வசதி வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி சிறப்பான, தரமான வீடுகளுக்கு அதிகபட்சம் 7 புள்ளிகள் வரை வழங்கப்படும்.
கட்டுமானத்தின் தரம், நிலத்தின் சட்டபூர்வமான நம்பகத்தன்மை, கட்டுமான நிறுவனத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த புள்ளிகள் வழங்கப்படும். வீடு வாங்க திட்டமிடுபவர்கள் இந்த புள்ளிகளை வைத்து குறிப்பிட்ட வீட்டை வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும். இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி விரைவில் ஒப்புதலை தர உள்ளது என தேசிய வீட்டு வசதி வங்கியின் தலைவர் ஆர்.வி.வர்மா தெரிவித்துள்ளார். மேலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு வட்டிச் சலுகை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தேசிய வீட்டு வசதி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 03 Apr 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|