- சென்னை புதுச்சேரி இடையே சொகுசுக் கப்பல் இயக்க உரிமம் தரப்படும். நாராயணசாமி அறிவிப்பு.
- தினகரனை ஆதரவு MLA ரத்தினசபாபதி எம்எல்ஏ முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அஇஅதிமுகவில் இணைந்தார்
- தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில், தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை. அமைச்சர் பாண்டியராசன் அறிவிப்பு.
- உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் சிகாகோ நகரில் சிறப்பாக நடந்தது.
- ‘அமெரிக்கா மிரட்டலால் பயம் இல்லை; ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை’ - இந்தியா திட்டவட்ட அறிவிப்பு
- `வங்கித் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்!' நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு
- நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தல். வைகோ, நில்சன் மற்றும் சண்முகம் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள்.
- VIT விஸ்வநாதன் அவர்கள் பதிப்பித்துள்ள 46000 பெயர்கள் கொண்ட சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள் நூல் சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் வெளியீடு
- எழும்பூர் தொடரி நிலையத்தின் மேற்கு நுழை வாயிலில் இருந்த
- அடையாறு ஆனந்த பவன் உட்பட அனைத்துக் கடைகளும் இன்று இடிக்கப்பட்டன.இங்கே புதிதாக மற்றொரு நடைமேடை அமைகின்றது.
- சாலை விபத்துகளைத் தடுக்க,டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதைக் கட்டாயமாக்க இந்திய நடுவண் அரசு திட்டம்.
- திருமணத்துக்கு முன்பு எச் ஐ வி சோதனை கட்டாயம்.கோவாவில் சட்டம் இயற்ற பரிசீலணை.
- சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பத்து குற்றவாளிகள் சென்னை அதிரடி தனிப்படையினரால் கைது.
- 3,968 மருத்துவஇடங்களும் தமிழக மாணவர்களுக்குத் தான் ஒதுக்கப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர்
- வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீடு
- உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து
- புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
- டெல்லி வகுப்புஅறைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ, தடை கோரும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
- மராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை, பின் தேதியிட்டுக் கொண்டு வர முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- எல்லைக்கு அருகில் இந்தியா நிறுத்தி இருக்கின்ற போர் வானூர்திகளை, பின்நகர்த்தும்வரை, வான்வெளியைத் திறக்க முடியாது. பாகிஸ்தான்.
- விண்ணப்பிக்காமலேயே அனைத்து சான்றுகளும் கிடைக்கும்; ‘மக்களைத் தேடி அரசு’: ரூ.90 கோடியில் புதிய திட்டம். சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.
- தெற்குத் தொடரி திட்டங்களுக்கு 4118 கோடி ஒதுக்கீடு
- பச்சை அட்டை (Green Card) வழங்குவதை உயர்த்த அமெரிக்க நாடாளுமன்றம் காங்கிரஸ் அவை ஒப்புதல் ஆதரவு 365 எதிர்ப்பு 65
- பாரத ஸ்டேட் வங்கி மேலாண் இயக்குநர் அன்சுலா காந்த், உலக வங்கியின் மேலாண் இயக்குநர் ஆகிறார்.
- இந்தியாவில் ஒட்டு மொத்த மருத்துவர்கள் எண்ணிக்கை 11,59,309
மராட்டியம்-1,73,384 ,தமிழ்நாடு -1,35,456, கர்நாடகம் - 1,22,875, ஆந்திரப் பிரதேசம்-1,00,587, உத்தரப் பிரதேசம்- 77,549
- வட துருவத்தில் இருந்து தென் துருவம், மீண்டும் வட துருவம் 46 மணி 39 நிமிடங்களில் தரை இறங்காமல் வலம் வந்து கட்டார் வானூர்தி சாதனை.
- 30 ஆண்டுகளாக நாள்தோறும் 5 நிமிடங்கள்ஒலித்த, உலகின் ஒரே லத்தீன் செய்திஅறிக்கையை ஃபின்லாந்து வானொலி நிறுத்திவிட்டது
- மீன்கள் கண்களை மூட முடியாது. ஆனால் Zebra என்ற மீன் மட்டும் மனிதர்களைப் போலவே உறங்குவது கண்டுபிடிப்பு.
- 'பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறோம் தயாராக இருங்கள்': வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்த யஷ்வந்த் சின்ஹா
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை நடைபெறாத அரிய நிகழ்வு
- இறுதிப் போட்டி சமன். சூப்பர் ஓவர் சமன். அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி.
- அடுத்த தலாய்லாமாவை நாங்களே தேர்வு செய்வோம். இந்தியா தலையிடக்கூடாது. சீனா மறைமுக எச்சரிக்கை.
- பலுசிஸ்தானில் தங்கம் தோண்டும் சிலி நிறுவன ஒப்பந்தத்தை விலக்கிய பாகிஸ்தான் 41,000 கோடி தர வேண்டும். உலக நடுவர் மன்றம் தீர்ப்பு
- இந்தியாவில் தற்போது 4 லட்சம் மின் வண்டிகள் ஓடுகின்றன. பாதி டெல்லி உத்தரப்பிரதேசத்தில். நிதின் கட்கரி பேட்டி
- ஹூண்டாய் கோனா. இந்தியாவின் முதலாவது மின்சார எஸ்யுவி கார் அறிமுகம்.
- உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை 56,695. போதிய விவரம் இல்லாமல் பத்து ஆண்டுகளாக உள்ள 900 வழக்குகள் தள்ளுபடி.
- உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தை மீறி விட்டன. ஸ்டாலின் குற்றச்சாட்டு.
- 9 மாதங்களில் முதன் முறையாக கடந்த மாதம் இந்திய ஏற்றுமதி 10 விழுக்காடு குறைந்தது.
- என் கடவுளே (My Lord) என்று நீதிபதிகளை அழைக்கக் கூடாது. சார் என்று அழைத்தால் போதும். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
- உலகைப் பாதுகாக்க வேண்டுமானால் யானைகளைக் காப்பாற்றுங்கள். Nature Geo Science வேண்டுகோள்.
- பிரெஞ்சுப் படையில் பறக்கும் வீரர்கள்.குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரன் முன்னிலையில் அறிமுகம்
- விதிமீறல்கள். பாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி அபராதம் விதித்தது கருவூல வங்கி.
- எம்.பி.பி.எஸ். தமிழகத்தைச் சேராத 22 மாணவர்கள் நேற்று தகுதி நீக்கம்.
- 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு, 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
- 299 கோடி செலவில், கிழக்குக் கடற்கரைச் சாலை ஆறு வழி ஆகின்றது.
|