இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான வீடியோவை டெல்லியில் நாளை வெளியிட இருந்த நிலையில், சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவுக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கை அரசு இந்த வீடியோவை பெய்யானது எனக் கூறுவதை முதலில் நிறுத்திக்கொண்டு, இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் இந்த வீடியோ காட்சிகளை அந்த நாட்டு அரசுக்கு கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.இது இலங்கை அரசு இந்த காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான வீடியோ ஒன்றை டெல்லியில் வெளியிட திட்டமிட்டிருந்ததேன் ஆனால், இதுவரையில் விசா கிடைக்கவில்லை. இந்த பிரச்னை கடந்த 8 மாதங்களுக்கு முன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. எனது தயாரிப்பாளர் சகாவுக்கு விசா வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் விசா வழங்கப்படவில்லை. அப்போது முதல் நான் விசாவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக பதிவு செய்துவிட்டு எனது பாஸ்போர்ட்டை அவர்கள் திரும்ப கொடுத்து விட்டார்கள். இது சம்பந்தமாக, இந்திய தூதரகங்களுக்கு கடிதங்கள், இ-மெயில்கள் அனுப்பியுள்ளேன். இதனால் இந்திய தூதரகத்தில் இருந்து சமாதானப்படுத்தும் வகையிலான பதில்கள் மட்டும் கிடைக்கிறது ஆனால் விசா கிடைப்பதில் முன்னேற்றம் எதுவும் இல்லை. காலம் செல்லச் செல்ல இந்திய அரசு எனக்கு விசா வழங்க தயாராக இல்லை என்பது மிக தெளிவாக தெரிந்துவிட்டது. இது ஒரு கவலையளிக்கும் விஷயம் என நான் நினைக்கிறேன். பலமான கொள்கைகள், ஜனநாயக ஆதரவு, பேச்சு சுதந்திரம் போன்றவை சிறந்து விளங்கும் இந்தியா போன்ற ஒரு நாடு, ஒரு ஆவணப் படத்தை பற்றி பேச வரும் ஒரு நபரை தடுக்க நினைக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஆவன படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவுக்கு முக்கியமான பல பிரச்னைகளை இந்த படம் எழுப்பும் என கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
|