LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சேனல் 4 ஆவன பட இயக்குனருக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு !!

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான வீடியோவை டெல்லியில் நாளை வெளியிட இருந்த நிலையில், சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவுக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கை அரசு இந்த வீடியோவை பெய்யானது எனக் கூறுவதை முதலில் நிறுத்திக்கொண்டு, இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் இந்த வீடியோ காட்சிகளை அந்த நாட்டு அரசுக்கு கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.இது இலங்கை அரசு இந்த காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. 

 

இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான வீடியோ ஒன்றை டெல்லியில் வெளியிட திட்டமிட்டிருந்ததேன் ஆனால், இதுவரையில் விசா கிடைக்கவில்லை. இந்த பிரச்னை கடந்த 8 மாதங்களுக்கு முன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. எனது தயாரிப்பாளர் சகாவுக்கு விசா வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் விசா வழங்கப்படவில்லை. அப்போது முதல் நான் விசாவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக பதிவு செய்துவிட்டு எனது பாஸ்போர்ட்டை அவர்கள் திரும்ப கொடுத்து விட்டார்கள். இது சம்பந்தமாக, இந்திய தூதரகங்களுக்கு கடிதங்கள், இ-மெயில்கள் அனுப்பியுள்ளேன். இதனால் இந்திய தூதரகத்தில் இருந்து சமாதானப்படுத்தும் வகையிலான பதில்கள் மட்டும் கிடைக்கிறது ஆனால் விசா கிடைப்பதில் முன்னேற்றம் எதுவும் இல்லை. காலம் செல்லச் செல்ல இந்திய அரசு எனக்கு விசா வழங்க தயாராக இல்லை என்பது மிக தெளிவாக தெரிந்துவிட்டது. இது ஒரு கவலையளிக்கும் விஷயம் என நான் நினைக்கிறேன். பலமான கொள்கைகள், ஜனநாயக ஆதரவு, பேச்சு சுதந்திரம் போன்றவை சிறந்து விளங்கும் இந்தியா போன்ற ஒரு நாடு, ஒரு ஆவணப் படத்தை பற்றி பேச வரும் ஒரு நபரை தடுக்க நினைக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஆவன படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தியாவுக்கு முக்கியமான பல பிரச்னைகளை இந்த படம் எழுப்பும் என கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

by Swathi   on 05 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.