|
|||||
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை! |
|||||
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்துவது, இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, எண்ணெய்த் துறையில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் நடத்தும் 3-வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நிதி ஆயோக் ஏற்பாடு செய்து இருந்தது. |
|||||
by Mani Bharathi on 16 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|