ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ப்ரீகேஜி பகுப்புகளை நடத்தி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதியம் ஒரு மணி வரையே நடத்துகின்றனர். இந்த நிலையில் தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அரசுக்கு அளித்துள்ள வரைவு பரிந்துரையில் ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.
மத்திய உணவு இடைவேளைக்கு பின்னர் குழந்தைகளை சிறிது நேரம் தூங்க வைத்து அதன் பின் பாடங்களை தொடர்ந்து நடத்தி மாலை 4 மணிக்கு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பலாம் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பரிந்துரைக்கு வழக்கம் போலவே பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.
|