LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்

அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலைத் திறந்துவைக்கப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தலைநகர் அபுதாபி அருகே முரேகாவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது.

 

 கடந்த 2018 பிப்ரவரியில் இக்கோயில் கட்டு மானப் பணியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்) அமைப்பு அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது.

 

இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இக்கோயில் 2024 பிப்ரவரி 14-ம் தேதி, பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் சுவாமி ஈஸ்வர சந்திர தாஸ், பிரம்ம விகாரி தாஸ் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவும் கோயிலைப் பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தனர்.

 

இதனைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக பாப்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

உலகளாவிய ஒற்றுமையைக் குறிக்கும் 

 

இதுகுறித்து அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவின் புனிதத் தலங்களைப் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துவதில் பிரதமர் மோடி சிறப்பான பணியாற்றியுள்ளார். இந்தியாவுக்கும் சர்வதேசச் சமூகத்திற்கும் அவரது கணிசமான பங்களிப்பு களை போற்றும் விதமாக, இந்த சந்திப்பின்போது மாலையும் காவி பொன்னாடையும் அணிவித்து பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார். அபுதாபி கோயிலின் கம்பீரமான வடிவமைப்பு மற்றும் சிற்ப வேலைப் பாடுகள் குறித்து பிரதமரிடம் சுவாமி பிரம்ம விகாரி தாஸ் எடுத்துரைத்தார். வரவிருக்கும் திறப்பு விழா, உலகளாவிய ஒற்றுமையைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் விவரித்தார். அபுதாபி கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

 

இக்கோயில் வளாகத்திற்காக ஐக்கிய அமீரக அரசு 17 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதற்காக ஐக்கிய அமீரக அரசுக்குப் பிரதமர் மோடி ஏற்கெனவே நன்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 35 லட்சம் இந்தியர்கள் இக்கோயில் திறக்கப்படும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கி யுள்ளனர்.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.