LOGO
  முதல் பக்கம்    மற்றவை    பொதுசேவை Print Friendly and PDF

புவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் !!

தருமபுரி அருகே நாகர்கூடல் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது புவிதம் என்ற கல்வி மையம்.நாம் இன்று மாற்று கல்வி முறை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் ! ஆனால் 15 வருடத்திற்கு முன்னரே அதனை ஆரம்பித்து இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மீனாட்சி அம்மாவிற்கு முதலில் மிகப்பெரிய நன்றியினையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்ள வேண்டும்.


அவர் 20 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்வதற்கு தற்போது பள்ளி இருக்கும் இடத்தை வாங்கி உள்ளார் .ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் படிக்காது, வேலைக்காக வேற ஊருக்கு செல்வதும் ,முக்கியமாக பெண்குழந்தைகள் இளமைவயதிலேயே திருமணம் செய்து கொள்வதையும் அறிந்து அவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ,வேளாண்மைகாக வாங்கிய நிலத்தில் , பள்ளியை தொடங்கி உள்ளார்..மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது .பள்ளிகளிலும் ,விடுதிகளிலும் பெரும்பாலும் சிறுதானிய உணவுகளே அளிக்கப்படுகிறது.


LKG பிள்ளைகளுக்கே ஆண்டுக்கு 5 முறை தேர்வு நடத்தும் அறிவார்ந்த பள்ளிகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் , இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை தேர்வுகளே வைக்க படுவதில்லை என்பது அனைவரையும் வியக்க வைத்தது.இங்கு மதிப்பெண்களால் குழந்தைகள் பிரிக்கபடுவதில்லை.சிறுவயதிலேயே அவர்களின் விருப்பத்தை அறிந்து கல்வி கற்கப்படுகிறது.பெரும்பாலும் செயல் வழி கல்வி முறையே இங்கு கற்பிக்கப்படுகிறது.எல்லாவற்றிற்கும் மேலாக மாலை வேளையில் குழந்தைகளுக்கு வேளாண்மை கற்பிக்கப்படுகிறது.வேளாண்மையின் முழு பருவமும் அவர்களுக்கு சொல்லி தருவதோடு அல்லாமல் ,அவர்களையே அதில் ஈடுபடுத்தி வருகின்றனர்.சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ,நீரின்றி அமையாது உலகு என்பதனை இளம்வயதிலேயே சொல்வடிவதோடு,செயல்வடிவமாகவும் கற்பிக்கின்றனர்.


தாங்கள் கற்கும் போதே தனக்கான உணவையும் உற்பத்தி செய்ய கற்றுகொடுக்கும் முறை ,எந்த பல்கழைகழகங்களிலும் சொல்லிதரபடாதது . மேலும் தையற்கலை ,கைவினை பொருட்கள் உள்ளிட்ட சுயதொழில்களும் கற்றுத்தரப்படுகிறது . இவை அந்தந்த மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொல்லி தரபடுகிறது.மெக்காலே கல்வி முறையால் ஒன்றும் பயனில்லை.தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற அனுபவ கல்வியே தற்போதைய சூழ்நிலைக்கு மிக அவசியமானது என்பதை அவர்களிடம் அறியமுடிந்தது.


பள்ளி வடிவமைப்பு முறை மிகவும் நுண்ணியமாக,சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் வடிவமைக்க பட்டுஇருந்தது.குழந்தைகள் அனைவரையும் தினமும் விருப்பத்தோடு பள்ளிக்கு வர செய்வதே ,ஒரு பள்ளியின் முதல் வெற்றி. அங்கு வந்த குழந்தைகளிடம் அதற்கான புன்னகையை பார்க்க முடிந்தது!இங்கு படிக்கும் குழந்தைகள் யாரும் ஆசிரியரை சார் என கூப்பிடுவதில்லை.அண்ணன் ,அக்கா என்றே ஆசிரியரை அழைக்கின்றனர் .ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்குமான தொடர்பு சக மனித உறவாகவே பிணைக்கப்பட்டுள்ளது.


8ம் வகுப்பிற்கு பிறகு அருகே உள்ள அரசாங்க பள்ளிகளில் மாணவ ,மாணவிகள் சேர்க்கபடுவதால்,அங்குள்ள தேர்வு முறைக்கு பயிற்றுவிக்கும் விதமாக ,இங்கு 6 ம் வகுப்பில் இருந்து அரசாங்க பாடதிட்டமே சொல்லி தரபடுகிறது.இருப்பினும் பள்ளியை விட்டு செல்லும் குழந்தைகள் அனைவரும் ,தனித்து இயங்க கூடிய சுயசார்பு தன்மையையும் ,மேலும் மதிப்பெண்களால் தங்கள் வாழ்வு ஒருபோதும் நிர்ணயிக்கபடாது என்பதையும் உணர்ந்தே செல்கின்றனர். அங்கு கல்வி மட்டும் போதிக்கபடுவதில்லை.ஒரு மனிதனுக்கு தேவையான முழுமையான வாழ்வியல் முறையும் சேர்ந்தே கற்ப்பிக்கபடுகிறது.ஒவ்வொரு பயணமும் இது போன்ற மானுடம் போற்றும் மகத்தான மனிதர்களை,இடங்களை எனக்கு அறிமுகபடுத்துகிறது,வாய்ப்புள்ள அனைவரும் சென்று கற்க வேண்டிய இடம்! கற்று வாருங்கள்  

புவிதம் 10
by Swathi   on 28 Aug 2014  1 Comments
Tags: Puvidham Rural Development Trust   Puvidham   Puvidham School   Puvidham Dharmapuri   புவிதம்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
29-May-2016 04:12:40 rajharao said : Report Abuse
இத தகவலி படித்த பொது தமிழ் நாட்டில் உள்ள அணைத்து ப்ல்லிஹளிலும் இதி நடைமுறை படுத்த கூடாதா என்ற ஆதங்கம் எழுகிறது மிக்கக நன்றி மீனாக்ஷி அம்மாவுக்கு ராஜா ராவ் thriukoilur
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.