'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாபாத்திரங்களை கொடுங்கள்',' தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ ஆர் ரஹ்மனின் கருத்து
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இது ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரும் கருத்தரங்காகும். இந்நிகழ்வில் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்றிருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஐகான் 2022 விருது பெற்றார். விருதினைப் பெற்ற பின் பேசிய அவர் மலேசிய மனிதர் ஒருவர் வட இந்திய திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும் என்று கூறியது தன்னை ஆழமாக பாதித்ததாக கூறினார். தான் சிந்தித்துப் பார்த்ததில் தனக்கு தெரிந்த சில கருத்துக்களை குறிப்பிடுவதாக கூறினார். அப்போது அவர் 'நம் எல்லோருக்கும் நம்முடைய நிறங்கள் பிடிக்கும்' என்று கூறினார். மேலும் 'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாபாத்திரங்களை கொடுங்கள். கருப்பானவர்களை செய்தி தொகுப்பாளர்களாக்குங்கள்' என்றும் தனது கருத்தினை தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறும்போது செய்தியாளர்கள், அமித்ஷா 'இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கூறியிருப்பதை பற்றி கேட்டபோது 'தமிழ் தான் இணைப்பு மொழி' என்று கூறிவிட்டு கிளம்பினார்.
|