LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில்

"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில் தமிழ் வளர்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர்.

தமிழ்ப்பேராயம் சார்பில் 'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்கள் பங்கு' தேசியக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் 20 ஆதீனங்கள் கலந்துகொண்டு தங்கள் தமிழ்மொழி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்புகளை பகிர்ந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக சுவாமிகள் இறைவன் சிவபெருமான் வளர்த்த தமிழ் மொழியில் ஓலைச்சுவடிகள் , செப்பேடுகள் , நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருந்த பன்னிரு திருமறை பாடல்களை கைப்பேசி வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியாக "திருமறை" எனும் செயலி அண்மையில் வெளியிடப்பட்டது. 14 வகை சாத்திரங்களை ஆங்கிலம் , தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். புலவர் படிப்புகளை வழங்க 70 ஆண்டுகளுக்கு முன்பு திருமறை வித்வானால் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரி தற்போது காலை அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது என்றார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில் , தமிழ் வளர்த்த ஞானப் பல்கலைக்கழகங்களாகத் திகழும் சைவ ஆதீனங்கள் பங்கு ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல . தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஓலைச்சுவடிகள் சேகரிக்கும் பெரும் பணியில் உ.வே.சா.வுக்கு குன்றக்குடி முதலைப்பட்டி கவிராயர் இல்லத்தில் கிடைத்த அரிய தகவல்கள் ஓலைச் சுவடிகளைக் கண்டு அகமகிழ்ந்து தமிழ் ஆலையத்தைக் கண்டேன் என வியந்தார் என்றார்.

எஸ்.ஆர்.எம். வேந்தர் பாரிவேந்தர் நடப்பு ஆண்டில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் புதிதாக தமிழ் சைவ சித்தாந்தத் துறை தொடங்கப்படும் என்றார்.

பேரூர் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் , சூரியனார் கோவில் ஆதீனகர்த்தர் சுவிட்சர்லாந்து சரஹணபவானந்த சுவாமிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

 

by Swathi   on 26 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதிகளா?  வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு
தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக  இயற்கை எய்தினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன்  எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
பத்மஸ்ரீ  முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.