|
|||||
"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில் |
|||||
"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில் தமிழ் வளர்ச்சிகளை பகிர்ந்துகொண்டனர். தமிழ்ப்பேராயம் சார்பில் 'தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்கள் பங்கு' தேசியக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் 20 ஆதீனங்கள் கலந்துகொண்டு தங்கள் தமிழ்மொழி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்புகளை பகிர்ந்துகொண்டனர். கருத்தரங்கில் பேசிய தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக சுவாமிகள் இறைவன் சிவபெருமான் வளர்த்த தமிழ் மொழியில் ஓலைச்சுவடிகள் , செப்பேடுகள் , நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருந்த பன்னிரு திருமறை பாடல்களை கைப்பேசி வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியாக "திருமறை" எனும் செயலி அண்மையில் வெளியிடப்பட்டது. 14 வகை சாத்திரங்களை ஆங்கிலம் , தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். புலவர் படிப்புகளை வழங்க 70 ஆண்டுகளுக்கு முன்பு திருமறை வித்வானால் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரி தற்போது காலை அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது என்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில் , தமிழ் வளர்த்த ஞானப் பல்கலைக்கழகங்களாகத் திகழும் சைவ ஆதீனங்கள் பங்கு ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல . தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஓலைச்சுவடிகள் சேகரிக்கும் பெரும் பணியில் உ.வே.சா.வுக்கு குன்றக்குடி முதலைப்பட்டி கவிராயர் இல்லத்தில் கிடைத்த அரிய தகவல்கள் ஓலைச் சுவடிகளைக் கண்டு அகமகிழ்ந்து தமிழ் ஆலையத்தைக் கண்டேன் என வியந்தார் என்றார். எஸ்.ஆர்.எம். வேந்தர் பாரிவேந்தர் நடப்பு ஆண்டில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் புதிதாக தமிழ் சைவ சித்தாந்தத் துறை தொடங்கப்படும் என்றார். பேரூர் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் , சூரியனார் கோவில் ஆதீனகர்த்தர் சுவிட்சர்லாந்து சரஹணபவானந்த சுவாமிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
|
|||||
by Swathi on 26 Sep 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|