தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் தற்போது பிசியான படபிடிப்பில் இருந்து வரும் ஹீரோயின் சமந்தா, அடுத்ததாக விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம்.
மேலும், இப்படத்தில் ‘கோலிசோடா’ படத்தில் நடித்த சிறுவர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அவர்கள் பட்டணத்து சிறுவர்களாக வருகிறார்களாம்.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
|