சதுர்நடனக் கலைஞர் முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது
சதுர் நடனக் கலை பரதத்திற்கு முன் வடிவமாகக் கருதப்படுகிறது. தேவரடியார் அல்லது தேவதாசி பெண்கள் இச்சதிர்நடனக்கலைக்கு புகழ்பெற்றவர்கள். இம்மரபு பெண்களில் இறுதிப் பெண்ணாக தற்போதும் இருப்பவர் முத்துக்கண்ணம்மாள். இவர் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர். சதிர் நடனக் கலையினைஅறிந்த ஒரே சமகாலப் பெண்ணாக எஞ்சி இருப்பவர்.
இக் கலையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதாசிப் பெண்கள் கடவுளை மணந்து இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இப் பெண்களே கோயில் விசேஷ நாட்களில் சதிர் என்னும் தனித்துவமான நடனத்தினை ஆடுவர். அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக உள்ளது இந்த சதிர் நடனம். பத்மஸ்ரீ விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி என்று கூறும் முத்துகண்ணம்மாளுக்கு, இக்கலை பள்ளி அமைத்து பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே அவரது பெரு விருப்பமாக உள்ளது.
|