நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்.எல்.சி) ஐந்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு என்.எல்.சி தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே என்.எல்.சி பங்குகளை தமிழக அரசே வாங்குவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனை அடுத்து இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி, தமிழக அரசு என்.எல்.சியின் ஐந்து சதவீத பங்குகளை வாங்க நேற்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் என்.எல்.சி தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|