LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 1

சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி நிகழ்வு 1 

நோக்கம்:

    தமிழர்களுக்கே உரியத் தலைசிறந்த மருத்துவமாக ‘சித்த மருத்துவம்’ விளங்குகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட சித்தர் இலக்கியங்கள் இன்றும் பல்வேறு வித ஆய்வுகளுக்கு உட்பட்டவையாகவே விளங்குகின்றன.  தோண்டத்  தோண்ட பல சுவாரசியங்களை தன்னகத்தேக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர் இலக்கிய ரகசியங்களை உலக மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்னும் நோக்கில் இந்நிகழ்வு அமைகின்றது.

தீர்ப்பு வழங்குபவரே திருவள்ளுவர்:

    திருவள்ளுவர் இயற்றிய ‘திருக்குறள்’ அனைவரும் அறிந்ததே. திருக்குறளை ஆராயும் போது திருவள்ளுவர் தீர்ப்பு வழங்குபவராகச் செயல்பட்டிருப்பதை அறியலாம். இது செய்தால் இது நடக்கும்; இதற்கு இதுதான் பதில்; என்று கூறியிருப்பாரேத் தவிர இது செய்தால் இது நடக்கலாம் என்ற  ஊகமான  கருத்துக்களுக்குத்  திருக்குறளில்  இடமில்லை.

    “அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் 

     அஃதறி கல்லா தவர்”

    பின்னால் நிகழப்போவதை முன்னாலே அறிபவர் அறிவுடையவர் ஆவார். அவ்வாறு அறிய இயலாதவர் அறிவில்லாதவர் ஆவார்.

இவ்வாறு வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என மொழிபவர் திருவள்ளுவர். இதனால் தான் திருவள்ளுவரை ‘தீர்ப்பாளர்’ என்று கூறுகிறோம்.

திருவள்ளுவர்,

    “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்   

     வளிமுதலாய் எண்ணிய மூன்று”

என்கிறார்.

    அதாவது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் உடலில் சீரான நிலையில் இருக்க வேண்டும். இது மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் உண்டாகும். உலகின் எந்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும், எந்த மனித உடலுக்கும் இது தான் அடிப்படை. இதனை  ஈராயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே  திருவள்ளுவர்  அறிந்து  கூறியிருக்கின்றார்.

திருவள்ளுவரின் ஞான வெட்டியான்:

    திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ நூலை அறியாத மக்கள் இல்லை என்று கூறலாம். ஆனால் திருவள்ளுவர் இயற்றிய ‘ஞான வெட்டியான்’ என்னும் நூல் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூலாக ‘ஞான வெட்டியான்’ என்னும் நூல் விளங்குகின்றது. உலகெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு முன்னால், ஊகிப்பதற்கு முன்னால், அறிவியல், மருத்துவம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால் ஞானத்தினாலே அறிந்தபல செய்திகளைத் திருவள்ளுவர் இந்நூலில் கூறியிருக்கின்றார்.

திருமூலரின் திருமந்திரம்:

    “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்  

     அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

     மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய 

     சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எங்கனே” என்கிறது திருமந்திரம்.

அதாவது முகத்தில் இருக்கின்ற கண்களைக் கொண்டு பார்ப்பதை விட, அகத்தில் இருக்கும் கண்களைக் கொண்டு பார்ப்பதே சிறந்தது.

    “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

     திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்   

     உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்   

     உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”    என்கிறது திருமந்திரம்.

அதாவது உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து கொண்டேன். எனவே உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரையும் வளர்த்துக் கொண்டேன் என்பதாகும். 

முடிவுரை:

    உலக அறிவுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கொண்டவர்களாக விளங்கியவர்கள் சித்தர்கள். அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஆழமான பொருளுடையவை. சித்தர் இலக்கியங்களை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் என்று எவரும் இலர். இன்று வரை அவற்றை அறிந்து கொள்ள முற்படுபவர்களாகவே அனைவரும் விளங்குகின்றனர். அவ்வகையில் சித்தர் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.

 

 

by Lakshmi G   on 10 Oct 2021  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.