காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று
தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி
உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக
அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்.
பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து
நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
அதிக உயரம் கொண்டவர்கள் இந்த கோயிலில் தரிசனம் செய்ய முடியாது.மேலும் இந்த கோயிலில் சிறப்பாக கங்கைக்கு என்று தனி சன்னதி உள்ளது. தற்போது
நவக்கிரகம், துர்க்கை, மகாவிஷ்ணு ஆகியோருக்கு தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது
காவிரி கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஐந்து லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க கோயிலாகவும், கங்கைக்கு என்று தனி சன்னதி இருப்பதாலும் இந்த கோயில் மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது. காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும். பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து "ட' வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும். சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். |