|
||||||||
மந்திரம் |
||||||||
மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the ...level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை 'மந்திரம், யந்திரம், தந்திரம்' என்பார்கள்.
நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் - மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் - மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.
எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் - வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the ...level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை 'மந்திரம், யந்திரம், தந்திரம்' என்பார்கள்.
நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் - மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் - மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.
எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் - வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
|
||||||||
by Swathi on 17 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|