கடலில் வாழ்கிற பறவை ஒன்று. அதற்கு மற்ற கடற்பறவைகளோடு மீன்களைப் பிடித்துத் தின்று, இளைப்பாறி, உறங்கி, இனப்பெருக்கம் செய்து வாழ்க்கை நடத்துவது் பிடிக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இதுதான் வாழ்க்கையா என்கிற கேள்வி அந்தப்பறவையின் இதயத்தைத் துளைத்தெடுக்க, தினமும் சிந்தித்து ஒரு நாள் ஒரு முடிவுக்கு வருகிறது. "எந்த ஒரு குறிக்கோளும் சாதனையும் இல்லாத வாழ்வு வாழ்ந்து மடியக்கூடாது".
தன் இனத்தின் மற்ற பறவைகளை விட்டு உயரப் பறப்பதற்கான முடிவை எடுத்து உயர உயரப் பறக்க முயற்சிக்கிறது.
இது Richard Bach எழுதிய Jonathan Livingston Seagull என்கிற புத்தகத்தின் சுருக்கம்தான். புத்தகம் முழுவதும் அந்தப் பறவை உயர் நிலையை அடைவதற்காக எடுத்துக்கொள்ளும் போராட்டத்தைப் பற்றி விவரிக்கிறது.
|